கதை காலம் : 15 வயது 10ஆம் வகுப்பு
கதை களம் : ஆர் பி ஸ் கணித டியுஷன் மகாராஜநகர்
பொழுது: கதிரவன் கண்ணுறங்கும் நேரம் .. (நமக்கு எப்பவும் அமாவாசை தான்)
ஊருக்குள்ள நல்லா படிக்கிற பயனு ஒரு மருவாத இருந்துச்சி .. ஒழுங்கா நான் உண்டு படிப்பு உண்டுனு இருந்தேன்.. எங்கிருந்து தான் வருவாங்கலோ நமக்கு னு இவனுங்க.. மச்சான் நான் ஒரு புள்ளைய லவ் பண்றேன் னு ஒருத்தன் வந்தான் Hari Ram .. அதுக்கு என்ன டா மாப்ள நல்லா பண்ணு ...
அந்த புள்ள இது சொன்னா அது சொன்னா னு தினமும் கதை சொல்லிட்டு திரிஞ்சான் .. நாங்களும் கேட்டுட்டு இருந்தோம்.. ஒரு நாள் நல்லா போயிட்டிருந்த கதைல ட்விஸ்ட் .. திடிர்னு பிளேட் எடுத்து கைய கிழிக்கறது பேனா மைய குடிக்கறதுனு அலும்பு பண்ணிட்டான்.. என்னடா உன் சங்கதினு கேட்டேன் .. ஒரே ஒப்பாரி பாட்டா ஓடுச்சி ..
சரி நம்ம கூட பத்து வருஷமா படிக்கிற பயபுள்ள ஆச்சே ஏதாவது உதவி பண்ணட்டுமானு கேட்டேன்.. எனக்கு இப்ப மட்டும் இல்ல எப்பவுமே ஊர்ல இருக்கிற பயலுகளுக்கு உதவி பண்றதுனா உறுகாய் சாப்ட்ற மாதிரி.. (எப்பவும் சோத்த விட உறுகாய் அதிகம் சாப்டறவன் நான்)
ஊர் ஒண்ணு கூடிருச்சி .. மாப்ள நீ எதாவது பண்ணியே ஆகணும்டா .. நீ ஒரு அண்டர்டேக்கர் பேன் மாப்ள .. நீ தான் நல்லா யோசிப்பயே ஐடியா ஏதாவது பண்ணு மாப்ள.. இப்படி என்ன சுத்தி எப்பவும் ஒரு கூட்டம் உண்டு .. (இப்பவும் இருக்கு..)
சாயங்காலம் ஆறு மணிக்கு டியுஷன் ல சில புள்ளைக படிகித்துங்க னு சொல்வேயே அதுல கூட ஒரு புள்ள இவன் ஆள் பிரண்டு னு சொன்னான்ல. அது பெயர் கூட அஞ்சலி .. (பெயர் மாற்ற பட்டுள்ளது ) .. அதுட்ட போய் என்ன மேட்டேர்னு விசாரிப்போம் மாப்ள னு ஐடியா குடுத்தாங்க..
அந்த புள்ள சும்மாவே சீன் போடும் . அவ அப்பன் ஆத்தா டாக்டர் வேற..
ஒழுங்கா போயிட்டு இருந்த டியுஷன்ல இது வேறைய வம்பு .. நான் சொன்னேன் மாப்ள Siva Manian உங்க எதிர் வீட்ல உள்ள ஒரு பிகுர் இதுக்குதுல நம்ம டியுஷன் ல அது ட கேப்போம் டா னு சொன்னேன்.. இல்ல மாப்ள அது சரி பட்டு வராது வீட்ல சொல்லிடும் வேணாம் னு சொல்லிட்டான்.. சரி நாம நல்லது தான செய்ய போறோம் நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்லன்னு கமல் சார் சொல்லிருக்காரே அப்புறம் என்ன செய்வோம் னு முடிவு பண்ணியாச்சி..
ரெண்டு நாள் மூனு நாள் ட்ரை பண்ணுனோம் ஆனா அந்த புள்ளைய புடிச்சி பேச முடியல .. அதுக்குள்ளே எங்க இந்த பிளேட் பக்கிரி ரொம்ப படுத்த ஆரம்பிச்சிட்டான் எல்லாரையும் .. ஒட்டு மொத்த எங்க கிளாஸ் பசங்களும் வந்துட்டாங்க ஆதரவு கரம் கொடுக்க.. ஆனா வழக்கம் போல நாம தான் திட்டம் போடணும் , செயல் படுத்தணும் . . தீயா வேலை செய்யணும் டா கொமாரு னு பல ஐடியா வந்துரிச்சி.. அந்த புள்ளைய மறை முகமா குப்ட்டு பார்த்தேன் வேலைக்கு ஆகல .. அதுக்குள இவன் அந்த புள்ளைய பாக்கிறான்னு ஒரு புரளி வேற நம்மள சுத்தி பரவ தொடங்கிடுச்சி .. இது அந்த புள்ளயும் நம்பி சீன் போட்றத இன்னும் அதிகம் ஆக்கிடுச்சி..
இது வேலைக்கு ஆகாது னு ஒரு அமைப்பு தொடங்கிட்டோம் .. அதுக்கு பெயர் ஆங்கிலத்துல ட்ரிபிள் எஸ்( எஸ் எஸ் எஸ்) .. என்ன அர்த்தம் னு கேக்கறேங்களா சுடிதார் செக்யூரிட்டி சர்வீஸ்.. அந்த அமைப்பு முக்கிய வேலை புள்ளைகளின் வீடுகளை கண்டறிவது தொலைபேசி எண்களை அறிவது என பெண்கள் பாதுக்காப்பு குறித்த அனைத்து பொறுப்புக்களும் அதில் உண்டு.. அதன் நிர்வாகிகள் Nagoor Mideen Rama Swamy Veera Mani Ganapathy Subramanian கஞ்சா கணேஷ் இன்ன பிற டியுஷன் நண்பர்கள்..
ஒரு வழியாக அந்த புள்ளையிடம் பேச வாய்ப்பு வந்தது . ஆனால் நேரம் பார்த்து இந்த நல்ல உள்ளம் கொண்ட நண்பர்கள் அன்று தாமதம்.. போன் அடிச்சேன்.. சாரி மெசேஜ் அனுப்பினேன். நீயே டீல் பண்ணு மாப்பு வி ஆர் ஆன் தி வே னு ரிப்லே வந்துச்சி.. நாம தான் வீர தீர சூர பறாக்கிரம அண்டர்டேக்கர் பேன் ஆச்சே.. ஒழுங்கா நேர் வழில போய் பேச மாட்டோம் ல .. டியுஷன் வீட்டு சுவர் ஏறி குதிச்சி படி ஏற்ற புள்ளைய வழி மடக்கி "யே புள்ள இந்தா நில்லு டியுஷன் முடிஞ்சு வந்து கேளு உண்ட பேச வேண்டியது இருக்கு "னு சொல்லிட்டு படிக்க அனுப்பிட்டேன்.. அப்பக்கூட படிக்கறத தொந்தரவு பண்ற பழக்கம் எனக்கு இல்ல.. அட நம்புங்க பாஸ் மெய்யாலுமே நானும் படிக்கிற பய தான்..
வீர தீர செயல் செய்ய போன நான் எந்த மேட்டர் பத்தி பேச வேண்டியது இருக்குனு சொல்ல மறந்துட்டேன் .. போச்சா சொனமுத்தான் .. வழக்கம் போல நம்மள சுத்தி ஓடி புடிச்சி விளையாண்டுட்டு இருந்த கதை இப்ப உண்மைன்னு ஊர் வும் உள் மனசும் அவளுக்கு தந்தி அடிசிருக்கும் போல .. நிக்க சொன்னா நிக்கல.. நாம தன்மான சிங்கம் ஆச்சே விடுவோமோ நம்ம சைக்கிள் ல அவ ஸ்கூட்டி ய சேஸ் பண்றது அவ வீட்டு வாசல போய் நின்னு சீய்ட்டி அடிக்கறது..நம்ம அமைப்பு மூலமா வீட்டு போன் நம்பர் கண்டு பிடிச்சி போன் போடறது இன்ன பிற சடங்கு சம்பிரதாயம் அனைத்தும் செயல் படுத்தி (அந்த புள்ளைய பாட படுத்தி )
கதை போயிட்டு இருந்துச்சி ..
சரி நம்ம நடவடிக்கைகள தொடர்ந்து உற்று நோக்கி கொண்டிருந்த நல்ல உள்ளம் கொண்ட வகுப்பு நண்பர்களுக்கு கொஞ்சம் பாவமா கூட தோணல .. இன்னும் இன்னும் னு கொளுத்தி என் மூளைக்கு அடில வச்சி ஓட விட்டாங்க..
இந்த ரண களத்துல அந்த புள்ள அவ அண்ணனுக்கு எங்க டியுஷன் மாஸ்டர் க்கு அவ என்ன நினைச்சிட்டு இருந்தாலோ அதை சொல்லிட்டா.. அவ்வளோதான்.. ஊருக்குள்ள ரவுடி பொரிக்கி னு நல்ல பெயர் வந்துருச்சி.. எங்க மாஸ்டர் சும்மா வெறும் கையவே நக்குவாறு... நான் இல்லாத நேரம் பார்த்து நண்பர்கள்ட அவன் கூட சேராதீங்க பா.. அவன் பொரிக்கி .. அவன் தான் உங்க கேங் லீடர் ஆ னு வறுத்து எடுத்திருக்காரு.. இதுல நான் அவர்க்கு சொந்தம்னு தெரிஞ்சு போச்சி.. உங்க அப்பாவ பார்த்தேன் னு ஒரு நாள் போட்டாரு ஒரு அணுகுண்ட.. அவ்வளோதான் .. அன்னைக்கு நான் வீட்டுக்கு எப்படி போன்னேன் னு நினைச்சா இன்னமும் சிரிப்பு சிரிப்பா வருது..
ஆமா இந்த கதைக்கும் ஏன் ஆகாவழி கதைனு பெயர் வந்துச்சினு பார்க்குறிங்களா.. அந்த பிளேட் பக்கிரி கடைசில என்ன தெரியுமாங்க சொன்னேன் .. அப்படி ஒரு புள்ளையே இல்ல .. எல்லாம் கதையாம்..
பி.கு: இந்த கதையை என் பள்ளி நண்பர்கள் டியுஷன் நண்பர்கள் , அந்த டியூஷனில் படித்த நல்லவர்கள் , என்னை போன்று உதவி என்றதும் அப்பாவி தனமாக ஓடி உதவி செய்து அவஸ்தை படும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் அர்ப்பணிக்கிறேன்