Pages

Tuesday, 19 February 2013

மூன்றாமவனின் நெஞ்சில் மட்டும்

மேகம்
 எதற்காகவோ கண்ணீர்
 அஞ்சலி செய்கிறது 
என்றான் முதலானவன் 

இல்லை 
அது தன் ஆனந்த கண்ணீரை 
எனக்காய் பரிசளிக்கிறது 
என்றான் இரண்டாமவன் 

ஒன்றும் சொல்லாமல் நின்ற 
மூன்றாமவனின் நெஞ்சில் மட்டும் 
மழை வெள்ளம் 

No comments:

Post a Comment