நேரம் தவறாமல் வருபவன் நான் ... நேரம் கடந்தே வந்த உன் காதல் ..
சிக்னல் க்காக காத்திருக்கும் பேரூந்து .. சிணுங்களில் காதல் சொல்லும் நீ ..
எப்போது வந்தாய் என் இருக்கையின் இட இருக்கைக்கு ..
உலகை பார்த்து செல்பவன் உனை காண்கிறேன்
என்னிடத்திலே உலகை காண்பதாய் நீ ..
வழி மாறி வந்தவளோ இடமாறி அமர்ந்தவளோ
கதை சொல்ல வந்தவளோ கவிதை பூ தொடுப்பவளோ
எதுவென்று அறியுமுன்னே
காது கடிக்கிறாய் கன்னம் தடவுகிறாள்
காதல் கவிதை உடலில் எழுதுகிறாய் ..
கூட்டம் மறைந்துபோக கூத்தாடி நானாக
கூடி களவுகளில் கண்கள் மூடுகிறாய்
கண்கள் திறக்கும்போது போகிறாய் என்செய்ய !
No comments:
Post a Comment