Pages

Wednesday, 10 April 2013

ஆகாவழி கதை



ரெண்டு வாரம் சும்மா தான் இருந்தேன் இந்த சைட் க்குள்ள ஒரு பயலும் வரல.. நாம இண்டேர்விஎவ் போற நாள் பார்த்து வந்தாங்க
ஏட்டு அடி ஆழத்துக்கு பள்ளம் பறிக்கற வேலைக்கு கம்ப்றேச்சர் கொண்டுட்டு.. சரி இது தான் நம்மகு ஒதுக்கலைய அந்த பக்கத்து சைட் சூப்பர்விசர் தான வரணும் னு அந்த பக்கிக்கு போன் போட்டேன்.. ஆமா பா நாளைக்கு காலைல நான் அங்க இருப்பேன் சீக்கரம் வந்துரு நான் அவரு.. கொஞ்சம் நேரத்துல நம்மள இண்டேர்விஎவ் க்கு கேரளா வர சொல்லி கூப்ட அவருக்கு போன் போட்டு நான் லீவ் சாமி , நீங்களே பார்த்துக்கோங்க னு சொல்லி போய்ட்டேன்.. அஞ்சு அடி வட்டமா எடுக்க சொல்லிடு போயிருந்தேன்.. மறுநாள் வந்து பார்த்த பயபக்கி நாலர அடி தான் எடுத்து இருக்கு.. அந்த உயர்ந்த சூப்பர் விசர் ரும் வந்து பாக்கல.. நானும் அந்த பெரிய சூப்பர்விசர் ட கேட்டன் , ரொம்ப நல்ல மனுஷன் அவரு அது ஒன்னும் பிரச்சனை இல்ல, விட்ரு பா நம்ம சைட் க்கு உடனே வா பில் எடுக்கணும்னு கூப்பட்டார்.. நானும் போய்ட்டன்..
மிசின் வந்திருந்தது இந்த கதை நடந்தது நாலு அஞ்சி நாளுக்கு முன்னாடி..

நேத்து அந்த குழில வளையம் இறக்க வந்த ஆளு இதுலாம் முடியாது சார் .. அஞ்சு வேணும் .. குழி எடுத்து வைங்க வரோம் னு போய்ட்டாங்க..
சரி போன்னவங்க சும்மா போன்னாங்களா , முதலாளிக்கு போன் போட்டு குழி சிறுசா இருக்கு நாலு அடி கூட இருக்காது போல. எடுத்து வைங்க ரிங் எறக்கி தரோம் னு சொல்லிட்டாங்க.. எங்க முதலாளி தான் ரொம்ப நல்லவர் ஆச்சே சும்மாவே ஊருக்குள்ள மழை பெஞ்சா தெருவுள்ள நாய் தொரத்துன்னா நம்மட்ட தான் டென்ஷன் ஆவாரு (எவனாது வேலை செய்ஞ்ச காசு கேட்டு வந்தாலும் அப்படிதான்).. இது தான் வாய்ப்புனு சும்மா வெண்ணி அள்ளி ஊத்துனாரு .. நானும் போயா போ இன்னும் ஒண்ணு ரெண்டு நாள் தான் டி அப்புறம் இருக்கு ரிவிட் னு அமைதியா டீ குடிச்சிட்டே தம் அடிச்சிட்டே கேட்டுக்கிட்டு இருந்தேன்..

இந்த நிலைமைல சைட் ல லபௌர் ஒருத்தனும் கிடையாது.. முடிஞ்சு போன்ன சைட் னு அவளோ பேரையும் போட்டி தூக்கி குடுத்து வீட்டுக்கு அனுப்பியாச்சி.. கட்டடத்துக்கு தண்ணி விடற எங்க  லோக்கல் லபௌர் வர சொல்லி சரி இன்னைக்கு ஆள் புடிச்சி வேலைய முடிப்போம் னு ஊர் க்குள்ள அழைஞ்சா ஒரு பயலும் வர மாட்டேன் குறான்.. கேட்டா அமாவாசை யாம்..

நாசமா போச்சி நம்ம பொழப்புன்னு நானே மண்வெட்டி கடப்பாரை தட்டு எடுத்து குழி க்குள்ள இறங்கிட்டன்..
"எலிக்கு என்ன வேலை மண்ணு பறிக்கிற வேலை
பூசாரிக்கு என்ன வேலை மணி அடிக்கிற வேலை
 சூப்பர்விசர் க்கு என்ன வேலை சும்மா இருக்கிற வேலை "
அப்படிங்கற தத்துவத்த நம்பி கிடந்தவனுக்கு
உச்சி நட்டுக்கிச்சி
உள்ளங்கை பிச்சிகிச்சி
உச்சில வேர்த்து கால் சட்டை நனைச்சி மண்ல போகுது நீரு,

திசை தெரியாம குழி க்குள்ள  மண்ணு பறிக்கு இந்த கேலட்டு மனுஷன் நம்மக்கு அப்ப தான் ஐடியா சொல்றாரு..
"தேம்பரம்(தெற்கு பக்கம்) மேடு
வடவரம்(வடக்கு பக்கம்) கோடு
கெலவரம்(கிழக்கு பக்கம்) போடு
மேவரம்(மேற்கு பக்கம்) மாட்டு"
எந்த திசை ல இருந்துயா வந்த நீ
அய்யா சாமி இப்படி நீ தெச சொன்னா நான் போய்டுவேன்  ..
ரெண்டு பெருமா சேர்ந்து அஞ்சு அடி வட்டத்துக்கு குழி எடுத்து மண் அள்ளி தூக்கி குடுத்து வெளில கொட்டி
ஒரு வழியா அவங்க சாயங்காலம் வர்றதுக்குள்ள ரெடி பண்ணி முடிச்சிடோம்

ஆமா இந்த கதைக்கு எதுக்கு ஆகாவழி கதை னு பெயர் வச்சன்னு யோஷிக்கேங்களா.. காசு வாங்கிட்டு ஒழுங்கா வேலை செய்யாத கம்ப்றேசர் காரன்.. வரவேண்டிய சூப்பர்விசர் வராம இருந்தது மட்டும் இல்லாம அவருக்கு பில் எடுக்க கறி வலிச்சி நம்மள வரவைக்க எல்லாம் சரிதான்னு போய் சொன்ன அந்த பக்கி . லபௌர் எல்லாரையும் ஊர்க்கு அனுப்புன முதலாளி.. அமாவாசை கதை சொல்ற ஊர்க்காரங்க.. இந்த ஆகாவழி பேர்வழிகள நம்பி பொழப்பு கேட்ட நான் மட்டும் வேற யாரு.
அதான் கதைக்கு என் பெயரே வைச்சிடேன்..

பின் குறிப்பு: பார்த்த வேலைக்கு ரெண்டு லபௌர் கணக்கு காட்டி காசு கண்டிப்பா வாங்கிடுவேன். உபரி உற்பத்தி உபரி இலாபம் இது எப்பவும் இருக்க கூடாது னு நினைக்கிற சொசியளிஸ்ட் நாங்கோ..

No comments:

Post a Comment