ஒரு முறை என் நண்பர் ஒருவருடன் அரசாங்க அலுவலகமொன்றுக்கு சென்று இருத்தேன்
எப்பொழுதும் போலவே அன்றும் ரொம்ப கூட்டமாகவே இருந்தது
நீண்ட நேரம் காத்திருந்தும் வேலை நடக்கவில்லை
நான் அலுத்துப்போய் அங்கிருந்த தின்னையோன்றில் சென்று உக்கார்ந்துகொண்டேன் அவன் தன் வேலையை முடித்து வரட்டுமென்று
அங்கு நடப்பதை எல்லாம் பார்த்தவாறு இருந்தேன்
அந்த அலுவலர் வந்ததே தாமதம்
வந்தவுடன் எங்கோ எழுந்து செ
ன்றுவிட்டார்
பின் டீ குடிக்க ஒருமுறை
ஆனால் வேலை ஏதும் நடந்தபாடாய் இல்லை
அவரின் இருக்கைக்கு பின்னால் ஒரு காந்தி படம்
காந்தி சிரித்தவாரே இருந்தார்
அந்த புகைப்படமும் அவரின் புன்னகையும் மௌன சாட்சியை இருந்தது எனக்கு
அவரின் புன்னகையில் லைத்துபோய்விட்டேன்..
சிறிது நேரம் கழித்து வந்த நண்பர் கோபத்துடன் சொன்னார்
வேலை நடக்கல டா நாளைக்கு வரணுமா ..
காந்தி போலவே நானும் சிறிது கொண்டே வா போலாம் என்றேன்
மோனோலிசாவின் புன்னகையை போல எத்தனை மர்மமானது உன் புன்னகை காந்திஜி
எந்த அரசாங்க இடத்திலாவது வேலை உடனே நடக்குமா என்று நினைத்த படி செல்கையில்...
எதிரே ஓர் அரசாங்க மதுக்கடை
ஆனால் வேலை படு வேகமாக நடக்கிறது
இங்கேயும் காந்திக்கு இடம் இதுக்குமா என்று எனக்கு தெரியாது
எனினும் அவர் அங்கு இருந்தால் மர்ம புன்னகையை மறந்து மௌன கண்ணீருடன் தான் இருப்பார் ..
No comments:
Post a Comment