Pages

Thursday, 16 August 2012

போலி


அன்று குழுக்களாக மக்கள் தங்கள் இடத்தை விரிவாக்க கோடரி வில் ஈட்டி கொண்டு சண்டை செய்தார்கள் ..
இன்று நாடுகளின் பெயர் சொல்லி யுத்தம் செய்கின்றனர்.
இதில் இவர்களே சமாதானத்தை பற்றி பேசுகிறார்கள் .. அன்பு செய்ய வேண்டுகிறார்கள் ..

வேடிக்கை ....

உண்மையில் இவர்கள் யாரும் யாரிடமும் உண்மையாக நட்பு கொள்வதேயில்லை ..
தான் உயரத்தில் இருக்கும் போது பிறரை நினைப்பதேயில்லை .
தனக்கு இழப்பு என்றால் தர்மம் சமத்துவம் நீயதி பற்றி பிதற்றுகிறார்கள் ..

தலைவனும்.. மக்களும்.. போலி தான் ..
ஒரு வேறுபாடு மட்டும் தான்..
அவனுக்கு பிறரை எமாற்ற வாய்ப்பு கிடைத்தாயிற்று ..
பாவம் மக்களுக்கு அவன் அளவில் ஏமாற்ற சந்தர்ப்பமில்லை.. இவனும் அவன் அளவில் எளியவரை சாதி மதம் இனம் மொழி வசதி பொருளாதாரம்
பாரம்பரியம் குடும்பம் என ஏமாற்றவே செய்கிறார்கள் ..

#மனிதன் #சுயநலம் #சமத்துவமின்மை #பாகுபாடு

No comments:

Post a Comment