மிக புரிதலோடு செய்யப்பட்ட நேற்று
புதிராய் மாறியது இன்று
ஏதுமறியாது சிறுவனாய் இருந்தபோதும்
ஏதேதோ அறிந்த இளைஞனாய் வாழ்ந்தபோதும்
விரும்பி செய்த தவறுகள் எத்தனை..!!
ஒன்றை விட்டோழிக்க மற்றொன்றை
பற்றினேன்
குடியை தொலைக்க தனிமையை பற்றினேன்
தனிமையை மறந்து உன்னை பற்றினேன்
என்னை மறந்து புகையை பற்றினேன்
உன்னையும் என்னையும் புரியாது
மற்றொரு குடியை மறுபடியும் ..
அனைத்தையும் இடித்தேன்- பின்
என்னாலே பல மதில்கள் என்னை சுற்றி
No comments:
Post a Comment