ஒரு பட்டாம்பூச்சியின் பறக்கும் நிழல்களில் வண்டி ஏற்றி படபடக்கும் மனதினை ..
அதன் நிழலில் வண்டி எற்றியதற்க்காய் உங்கள் கண்களை கொத்தி செல்வதை பார்க்கும்
தெருவோர நாய் ஒன்றை ..
பூனையின் புண்களில் வட்டமிடும் ஈக்களை கோவித்துக்கொள்ளும் எலிகளை ..
நீங்கள் கண்டிருக்கீர்களா இறந்த பாம்புகள் நகரும் சாலையை ..
அங்கு இதுவெல்லாம் தினசரி நிகழ்வுகள்