Pages

Friday, 3 April 2015

கண்ணாடி பார்த்துக்கொள்கிறேன்

இரண்டொரு முறை
கண்ணாடி பார்த்துக்கொள்கிறேன்
இது என்
இலையுதிர்காலம்
கீழே சிந்திய முடிகளை
எண்ணிப்பார்ககிறேன்
கையிலெடுக்கிறேன்

சாம்பல்நிற பறவையொன்று
வாசலில் சிலிர்க்கிறது
இறகடிக்கிறது
பறந்து சென்றது
இப்பொழுது சாம்பல்நிற
இறகு என் கையில்
இனி உங்களிடம் சொல்ல
ஒன்றுமில்லை
இது
வசந்தகாலமும் தான்
என் சிறகை பரப்பி
முதிர்ச்சியை அடித்து
பறக்கும்
தருணமிது..

No comments:

Post a Comment