Pages

Sunday, 6 January 2013


பெரும்பாலும் அலச்சியமாகவே துவங்குகிறது அந்த பயணம்
இலக்கு என்னவோ ஏழு கிலோமீட்டர் தூரம்தான்
துவக்கத்திற்கும் முடிவுக்குமிடையே நிலவொளியும் வாகன விளக்கொளியும் மட்டுமே உடன் பயணம் செய்ய
ஊரும் வீடும் எல்லைகளிலேயே நிற்கிறது

கருவேல மரங்களும் மஞ்சள் வேலமரங்களும்
என்னிடம் பெயர்களை சொல்லி அறிமுகம் செய்யாத பல காட்டு மரங்களும் வழிமுழுவதும்
ஏதேதோ கதை பேசி காற்றடித்து சிரிக்கிறது

அன்றும் இதுபோல்தான் முதல்முதலாக இந்த சாலையில் இரவு பயணம்
காற்றலைகளோடு ஏதோ எண்ண அலைகளும் வேகமாய் வந்து செல்லும் போது

போகாமல் நின்றுகொண்டிருந்தது அந்த பாம்பு
அது என் வண்டியை மட்டுமல்லாது கனவுகளையும் சற்று நிதானம் செய்ய வற்புறுத்தியது

அதனை கடந்தவுடன் பதஞ்சலியும் குண்டலினியும் கொஞ்சம் பேசி
பின் ஒவ்வொரு அடியிலும் கவனம் வைக்க தியானமாய் மாறிப்போகிறது ஒரு சிறு பைக் பயணம்

சிறியதோ பெரியதோ மெலியதோ பருமனோ அன்று முதல் இன்று வரை
தினமும் இரவு பயணத்தில் கண்டுவிடுகிறேன் ஒரு பாம்பை

என்னை கடித்துவிடக்கூடாது என்ற பதற்றத்தில் நானும்
தன்னை அடித்துவிட கூடாது என்ற பயத்தில் அதுவும்

நான் நேராகவும் அது செங்குத்தாகவும்
ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்யாமலே கடந்துவிடுகிறோம் அந்த இடத்தை ..

No comments:

Post a Comment