Pages

Thursday, 31 January 2013

இப்போதெல்லாம்


தீடிர்யென ஒரு நாள் மாலை வெயிலில் ஒரு பைக் பயணம்.
கல்லறையின் அமைதி அவன் செவியில்.
மரணத்தின் ஓலம் அவனின் மூடப்பட்ட இதயத்தின் வைப்பறையில்.
கடந்து சென்ற காற்று எல்லாம் சோகத்தின் மொழியை சொல்லிக்கொண்டு செல்கின்றன.
தென்னை மர கிற்றுகள் எல்லாம் காற்றிலே இறந்து போன பட்டாம்பூச்சியை போல் அசைந்துகொடுக்கின்றன .
அந்த தார் சாலைகள் எல்லாம் மரண ஊர்வலத்தை பதிவு செய்யும் கரிய காகிதமாய் தெரிந்து .
எதற்காக செல்கிறான் வீட்டுக்கு என்பது அர்த்தமற்றதாய் அர்த்தமுள்ளதாய் இல்லாமல் தினசரி கடமையில் ஒன்றாகிப்போனது.
அந்த வீட்டிற்கும் அலுவலகதிற்குமான வேற்றுமை கதவு மட்டும் தானே அன்றி
இரண்டிலும் இவன் ஒருவனே .
பயணத்தின் எல்லா திசைகள்ளிலும் சவபட்டி தான் அதுவும் அவரவர் உடல்களை அவரவர்களே கொண்டுசென்று வைக்கின்றனர் என்ற பிரம்மை.
அந்த பைக் அவனால் இயக்கப்படவுமில்லை நிறுத்தப்படவுமில்லை அதுவும் அதுவாகவே இயங்கிக்கொண்டு இருக்கின்றன என்று மனம் சொல்லியது.
கடந்து செல்லும் நாய்களும் பூனைகளும் மனிதர்களும் வெறும் சுவரொட்டியின் படங்களாகவே தோன்றியது , பேசுவதற்கு ஒன்றுமில்லை .
அந்த கடைக்காரர் கூட அவனை கண்டதுவும் தானாகவே சிகரட்டை எடுத்து கொடுத்து விட்டு டீ போட சென்றுவிட்டார் , கேட்பதற்கு ஒன்றுமில்லை.
மகிழ்ச்சியின் எல்லையில் மௌன பரவசம் ,
தனிமையின் இறுதியில் சோககீதம் ,
டீ யை தந்து விட்டு வானொலியை போட்டு சென்றார் .
இப்போது அதுவும் இவனின் கடந்த கால நினைவுகளும் பாடிக்கொள்கிறது அதனதன் இதயத்தில் , வானொலியும் இவனும் அசையவே இல்லை.
அந்த பாடலை எழுதியன் யார் ?,
இப்படியொரு சோக பாடலை அவன் சோகத்தில் எழுதிருப்பானா அல்ல என்றோ சுவைத்த தோல்வியை நினைத்து எழுத முடியுமா ?
ஒரு வேளை அவன் முடிந்ததை நினைத்து எழுதினால் , எழுதி முடிக்கும் போது அவன் சோகத்தில் இருப்பானா அல்லது தீர்ப்பு தந்ததும் உடைக்கப்படும் பேனா போல உடைந்துபோய்விடுமா ?
முறிந்த சிறகுகளை எழுதிய பின் கலீல் கிப்ரான் க்கு புதிய சிறகுகள் வந்திருக்கம்மா , அல்ல அல்ல முறிந்த சிறகுடனே பறந்திருப்பாரா ?
நிலா பார்த்தல் புத்தகத்தில் இறுதி புள்ளியை வைக்கும்போது அவருக்கு மனதில் என்ன தோன்றி இருக்கும் அமாவாசையா ? பௌர்ணமியா ?
இப்படி எழுந்த கேள்விகளுக்கு விடையறிய கேட்கவோ பேசவோ யாரும் இல்லை அவனுடன்
யாரும் இருந்தாலும் கேட்பதில்லை இப்போதெல்லாம்

Monday, 21 January 2013

பட்டாம்பூச்சி


அவன்  அந்த சைட் -யை விட்டு கிளம்பும்போது சூரியன் அவனின் தலைக்கு மேல் இருந்தது .
அவன் பொங்கலுக்கு தன் ஊருக்கு சென்று மீண்டும் வேலையில் சேர்ந்து இரண்டு நாட்கள் தான் ஆகிருந்தது .
தாராபுரத்தில் இருந்து 20 கிலோமீட்டர் மேற்கில் அவனது சைட் .
வேலை நிமர்த்தமாக அவன் அங்கிருந்து தாராபுரம் வழியாக கிழக்கில் 45 கிலோமீட்டர் தொலைவில் இருந்த மற்றொரு சைட்-யை காண வந்திருந்தான் .
பல்வேறு சைட்-களை பார்ப்பது என்பது அவனின் நான்கு மாத பணியில் பழகிப்போனதுதான் என்றாலும் ஒரே நாளில் இங்கும் அங்குமாக 100 கிலோமீட்டர் தொலைவு பைக் பயணம் புதிதுதான் .. 
அந்த பைக்-க்கு அது சாதாரணமாக விஷயம் என்று  நினைக்க தோன்றினாலும் ( சைடு மிரர் , இண்டிகட்டர் , ஹோர்ன் கிடையாது.. இவனை தவிர யார் உதைத்தாலும் முதல் தடவையில் கிளம்பாது  )அது ஓடுவதே அசாதாரமானது என்பதே அவன் முடிவு .

பெரும்பாலும் இவன் பயணிக்கும் அந்த பிரதான காட்டு வழி தார் சாலைகளில் முன்னும் பின்னும் சில மைல் தொலைவில் ஏதாவது ஒரு வாகனம் வந்துக்கொண்டுதான் இருக்கும் என்பது அவதானிப்பு.
கிளிஞ்சல்களை கொண்டு ஊதி விளையாடும் குழந்தையை போல கானல் நீரை பைக்-யை கொண்டு கிழித்து விளையாடிக்கொண்டே சென்றுக்கொண்டிருந்த பொழுதில் சற்றும் எதிர்பார்க்காத விதமாய் நிகழ்ந்தது அந்த விபத்து ..
எங்கிருந்தோ வந்த அந்த பட்டாம்பூச்சி அவனின் வலக்கையின் மீது மோதியது .
அது ஒரு கரும் மஞ்சள் நிறம் கொண்ட பட்டாம்பூச்சி . பொதுவாக அவன் கண்ட பட்டாம்பூச்சிகளில் பத்தில் ஏழு கரும் மஞ்சள் நிறம் கொண்டதாகத்தான் இருக்கும் . 
அது இடித்த பதற்றத்தில் வேகம் குறைத்த அவன் தன் வலது கை சற்று பலவீனமானது போல் உணர்ந்தான் . தொடர்ந்து வண்டி ஒட்டி சென்றாலும் அந்த வலக்கையின் மீதான வலியும் கவனமும் தொடர்ந்தே வந்துக்கொண்டிருந்தது .
இடித்து சென்ற அந்த பட்டாம்பூச்சி அவனின் பயணம் முழுதும் தொடர்ந்தே வந்துக்கொண்டிருந்தது மனதில் என்பதில் அதிசயக்க ஒன்றுமில்லை .
அந்த பட்டாம்பூச்சி வெயில் தாளாமல் வந்திருக்க கூடும் என்று சாலையின் குறுக்கே வந்த தள்ளாடும் கிழவியை பார்த்ததும் நினைத்துகொண்டான் 
ஒருவேளை அது பூக்களின் வாசனை மயக்கத்தில் வந்து இடித்திருக்கலாம் , டாஸ்மாக் வாசலில் நின்றுக்கொண்டிருந்த வண்டியை இடித்த குடிகாரனை போல.
தன்னை போலவே அரைகுறையாய் பறக்க கற்ற பட்டாம்பூச்சியாக கூட இருக்கலாம் என்று வேக தடை நினைவுப்படுத்தியது .
இரவு வீடு சென்ற பிறகும் கூட அவன் கையில் எதோ ஒன்று ஊறுவது போன்றே இருந்தது ..
ஒரு வேளை அந்த பட்டாம்பூச்சி மன்னிப்பு கேட்க வந்திருக்குமோ ஒரு முறை கதவை திறந்து பார்த்தான் .. 
அங்கும் ஒரு கரும் மஞ்சள் நிறம் கொண்ட பட்டாம்பூச்சி தும்பை செடியுடன் நடனமாடிக்கொண்டுதான் இருந்தது ..

எத்தனை பட்டாம்பூச்சிகளை அடித்திருப்பேன் சிறுவயதில் என்று நினைக்கும் 
அப்பொழுது கூட வருத்தம்கொள்ளாத நான் 
என் மேல் இடித்து தன் வண்ணத்தை என்னிடம் தொலைத்து சென்ற அந்த பட்டாம்பூச்சி தொலைத்த வண்ணத்தை வண்ணத்தை மீட்டெடுக்க எந்த திசையில் அலைகிறதோ என்று எண்ணும்போது வந்து விடுகின்றது .
ஒரு வேளை உங்கள் பயணங்களில் எங்காவது வண்ணமில்லாத பட்டாம்பூச்சியை கண்டுக்கொண்டால் 
தவறாமல் சொல்லி அனுப்புங்கள் என் இதயத்தின் விலாசத்தை ......

Sunday, 6 January 2013


பெரும்பாலும் அலச்சியமாகவே துவங்குகிறது அந்த பயணம்
இலக்கு என்னவோ ஏழு கிலோமீட்டர் தூரம்தான்
துவக்கத்திற்கும் முடிவுக்குமிடையே நிலவொளியும் வாகன விளக்கொளியும் மட்டுமே உடன் பயணம் செய்ய
ஊரும் வீடும் எல்லைகளிலேயே நிற்கிறது

கருவேல மரங்களும் மஞ்சள் வேலமரங்களும்
என்னிடம் பெயர்களை சொல்லி அறிமுகம் செய்யாத பல காட்டு மரங்களும் வழிமுழுவதும்
ஏதேதோ கதை பேசி காற்றடித்து சிரிக்கிறது

அன்றும் இதுபோல்தான் முதல்முதலாக இந்த சாலையில் இரவு பயணம்
காற்றலைகளோடு ஏதோ எண்ண அலைகளும் வேகமாய் வந்து செல்லும் போது

போகாமல் நின்றுகொண்டிருந்தது அந்த பாம்பு
அது என் வண்டியை மட்டுமல்லாது கனவுகளையும் சற்று நிதானம் செய்ய வற்புறுத்தியது

அதனை கடந்தவுடன் பதஞ்சலியும் குண்டலினியும் கொஞ்சம் பேசி
பின் ஒவ்வொரு அடியிலும் கவனம் வைக்க தியானமாய் மாறிப்போகிறது ஒரு சிறு பைக் பயணம்

சிறியதோ பெரியதோ மெலியதோ பருமனோ அன்று முதல் இன்று வரை
தினமும் இரவு பயணத்தில் கண்டுவிடுகிறேன் ஒரு பாம்பை

என்னை கடித்துவிடக்கூடாது என்ற பதற்றத்தில் நானும்
தன்னை அடித்துவிட கூடாது என்ற பயத்தில் அதுவும்

நான் நேராகவும் அது செங்குத்தாகவும்
ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்யாமலே கடந்துவிடுகிறோம் அந்த இடத்தை ..