Pages

Sunday, 23 December 2012

manasu

இனிப்புகளை கண்ட எறும்புகளை போல 
நகரத்தை நினைத்து மொய்க்கிறது மனசு 

கோழி பண்ணைகள்

என்ன சார் உங்க பண்ணைல இருக்கிற 2000 ஆயிரம் கோழி முட்டைய இப்படி வீணா அழிக்கறேங்க ,ஏன்?

என்ன சார் பண்றது , ஊர்ல எல்லாவனும் மாலை போட்டுருக்கான் , அதனால முட்டை விலை குறைஞ்சிடுச்சி . அதான் ...

இப்படி அழிச்சாலும் இழப்பு தான சார் ?

இல்ல பா , இப்ப கடைல ஸ்டாக்கும் குறையும் , அப்ப விலை ஏறிடும் ..

ஒ ஹோ , ஒரு கோழி எத்தனை முட்டை போடும் சார் ?

தினமும் ஒன்னு தான் .. :(

என்னது தினமும் ஒன்னா ? !! அது எப்படி சார் ??

தாய் கோழில இருந்து வரும் முட்டைல நல்லது மட்டும் எடுத்து , அந்த முட்டைய சிறப்பு அறைல பராமிப்பு செஞ்சி , குஞ்சிகளுக்கு வாரம் 2 வக்சின் (vaccine )  12 வாரம் போடணும் ..

அப்புறம் அது ஒரு வருஷதுக்கு தினமும் முட்டை போடும் ..

அது என்ன சார் தாய் கோழி ??

அதுவா! அது தான் உண்மையான கோழி .. 

இவ்வளோ குஞ்சிக்கு போடணும்னா எவ்வளோ சிலவு ஆகும் !

எல்லா சிலவும் சேர்த்தா ஒரு கோடி ஆகும் ..

அப்ப என்ன தான் சார் இதுல இலாபம் வரும் !!

அது என்ன சார் மிஞ்சிபோனா ஒரு கோடி வரும் ..

அடைங்கப்பா !!!

இப்படி ஊசி போட்டு வளர்ற கோழி முட்டை உடலுக்கு பாதிப்பு இல்லையா ??

தெரியல ஆனா நாங்க அதை சாப்பிட மாட்டோம் ...

ஓ ஹோ !!!  

Saturday, 15 December 2012

முகாரி பாடிகொண்டே அந்த ஜெ.சி.பி.
முருங்கையையும் வேம்பையும் எழுமிச்சையையும் வாதன மரத்தையும் சாய்க்க 
ஒற்றை தென்னையும் தேக்கும் புழுதியில் கண்மூடி மௌனம் காக்க 
அதன் நடுவே மூன்றாம் மரமாய் நானும் 

 

மொய்த்தன ..

அந்த முருங்கை மரத்தை தட்டி சாய்க்கும்போது சூழ்ந்துக்கொண்டது ஊர் சனம் ..
ஓரிரு பெண்கள் தங்களின் தேகத்தை தீண்டியவனை போல என்னை பார்த்தனர் ..
உங்கள் எல்லைக்கு வெளியே தானே சார் இது இருக்கு இதை ஏன் சாய்த்தீர்கள் என்ற அவர்களின் 
கேள்வி நியாயமானது தான் என்று எண்ணும் முன்னே அவர்களின் கைகள் அதன் கீரைக்கு மொய்த்தன ..

அதற்கு முன் சாய்த்த பல ஆண்டு வாதன மரத்திற்கு ஏன் இந்த கோவம் வரவில்லை என்பதை அவர்களின் மௌனம் பதில் சொன்னது ..

அந்த பொதுட மரங்களில் கூட வேறுபாட்டை விறகிர்க்கும் வாய்க்குமான மரங்கள் காட்டிவிட்டன ..

வட்டமிடும் கழுகுகள்  அப்பொழுது வானத்தில்மட்டுமல்லாது மண் மேலும் ..

மரத்தை அகற்றவேண்டிய பணம் மிச்சமானதற்காய் ஒருவரும் 
ஒரு வருட விறகை ஒரே நாளில் பெற்றதற்காய் ஒருவரும் 
சந்தோஷப்பட 

விளையாட இடம் போனதை நினைத்து சிறுவர்களும் 
இளைப்பாற மரம் போனதை நினைத்து நானும் 
சோகத்தில் 

அவன் கண்கள்



 பட்டாம்புச்சியை ஏன் இப்படி பிடித்து அடைத்து வைத்திருக்கிறாய் 
என்று அந்த சிறுவனை நான் கடிந்துகொள்ளும்போது 
வாடிவிட்டது 
அந்த வண்ணத்துபூச்சியை போலவே அழகாய் இருந்த அவன் கண்கள்