Pages

Friday, 30 November 2012

பிழைப்பு

ஒரு கம்பனியின் கட்டிட தொழிலாளி ஒருவர் தவறி விழுந்து இறந்துவிட்டார் .........
அந்த சைட் மேற்பார்வையாளர் எனக்கு அறிமுகம் ஆனவர் ..
இறந்த செய்தி கேட்டவுடன் அந்த நிர்வாக தலைவர் அலைபேசியை அனைத்து வைத்து விட்டார் 
மேலும் அவர் அந்த சைட் எடுத்து செய்ய வில்லை என்றும் அதன் சைட் மேற்பார்வையாளர் தான் அதை நடத்துவதாகவும் முதல் குற்ற அறிக்கையில் சொல்ல சொல்லிவிட்டார் ..
ஆனால் இறந்த பின் அறிக்கையில் அவரின் உறவினர்கள் சரியாக கம்பெனி பெயரை சொல்லிவிட மாட்டிகொண்டது .. இது போதாது என்று அவர் அழைத்து வந்த வக்கீலுக்கும் இதை சொல்லாது பொன்னது மட்டுமல்லாது சரியாக பணமும் தரவில்லை.. அந்த கோபத்தில் இருந்த வக்கீல் இதை அறிந்தவுடன் அந்த சைட் மேற்பார்வையாளர் நண்பரை அடித்து காவல் நிலையத்தில் தகராறு செய்து,வேண்டும் என்ற அளவு பணம் பெற்றுக்கொண்டு ஒரு வழியாக இரண்டு தினத்திற்கு பின் உடலை பேத பரிசோதைனை செய்து அனுப்பிவைத்தனர் ..

அந்த சைட் மேற்பார்வையாளர் நண்பருக்கு கிடைத்தது எல்லாம் பிரச்சனை தூக்கமின்மை பசி பட்டினி அழைச்சல் சோர்வு மனஇறுக்கம் அடி 

#எவன் வாழ்வதற்கோ எவன் கம்பெனி பெயரோ கெடாமல் இருக்கவோ எங்கள என் டா படுத்துறிங்க 

( பின்குறிப்பு : எங்க கம்பெனி இல்லைங்கோ )

No comments:

Post a Comment