Pages

Friday, 30 November 2012

அரசுக்கு ஓர் விண்ணப்பம்

சட்டமன்ற வைர விழாவிற்கு அதன் முதல் உறுபினர்களை அரசு அழைக்கிறதாம் ..
எந்த அரசு கட்டிட பொன்விழவிற்க்காவது அதன் கொத்தனாரையும் சிற்றாளையும் 
முடிந்தால் கட்டிட மேற்பார்வையாளரையும் அழையுங்களேன் 


#கட்டிட மேற்பார்வையாளர்  

நல்ல தம்பி

ஒரு கட்டிட தொழிலாளி மேல் இருந்து தவறி விழுந்து மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார் ,
தம்பி என்ற உறவில் ஒருவர் வந்தார் ... 
எதற்கு வந்தார் என்பதை தவறாக புரிந்துக்கொள்ளவேண்டாம்  
தொடர்ந்து படியுங்கள் 
இரண்டு கட்டிட மேற்பார்வையார்கள் இரண்டு மருத்துவமனை சென்று போராடி பின் மருத்துவர்கள் கைவிட 
கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் ..
மாலை நேரம் வாக்கில் வந்த அந்த உறவினர் ( பாசமான தம்பி )
வந்ததில் இருந்து உங்கள் கம்பெனி தலைவர்  எங்கே ? அவர் ஆபீஸ் எங்கே ? அவர் ஏன் அழைப்பை எடுக்கமாட்டேன்கறார் என்றவாறு இருந்தார் ..
பின் இரவு சாப்பிட சென்றுவிட்டார் ..
நாங்கள் அண்ணே கொஞ்சம் வாங்க ஐயா சீரியஸ் னு (அவர் இறந்து விட்டார் ) அலைபேசியில் அழைத்தால் 
இரு தம்பி இன்னும் பரோட்டா வரல.. வந்துரேன் னு பதில் சொல்றார் ..
பின் வந்து (பரோட்டா சாப்பிட்டு தான் வந்தார் ) மரணத்தை பற்றி சிறிதும் அலட்டிகொள்ளாது மீண்டும் அதன் தலைவருக்கு அழைக்க இப்ப சுவிட்ச் ஆப் தான் (நாங்க இன்போர்ம் பண்ணிட்டோம்ல )
அவருக்கு கோவம் வந்துவிட்டது ,என்ன ஆளுயா உங்க தலைவர் இப்படி பண்றாரு இந்த உடலை உங்க சைட் ல கொண்டுபோய் வைத்துவிடுவேன் என்று அவர் முடிவெடுக்க, சிறிது நேரம் கழித்து அவரே அழைத்து பேசினார் (நாங்க அதையும் வேறு ஒரு வழியில் இன்போர்ம் பண்ணிட்டோம்ல )
இப்போது அந்த தம்பிக்கு கோபம் வரவேயில்லை .. 
மிக அழகாக பேசினார் , ஐயா அண்ணா இறந்துட்டார் கொஞ்சம் ஏதாவது பாத்து பண்ணா நல்ல இருக்கும் .. 
நீண்ட நேர உரையாடலின் பிறகு  ஒரு புன்னகையுடன் அலைபேசியை வைப்பது மட்டும் தெரிந்தது ( இதை லாம் கேக்கணுமா சாமினு நான் தள்ளிபோயிட்டேன் )..
 செட்டில்மென்ட் முடிவு செய்யப்பட்ட மகிழ்ச்சி  

எந்த நாடக கண்ணீரும் அவருக்கு  வராதது எனக்கு மகிழ்ச்சி 

பொணத்த வச்சும் வியாபாரமா ..!! 

அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே என்ற பாடல் என் மூளையின் செவிப்பறையில் ஓட 
நான் அந்த இடத்தை விட்டு ஓடி வந்துவிட்டேன் 

பிழைப்பு

ஒரு கம்பனியின் கட்டிட தொழிலாளி ஒருவர் தவறி விழுந்து இறந்துவிட்டார் .........
அந்த சைட் மேற்பார்வையாளர் எனக்கு அறிமுகம் ஆனவர் ..
இறந்த செய்தி கேட்டவுடன் அந்த நிர்வாக தலைவர் அலைபேசியை அனைத்து வைத்து விட்டார் 
மேலும் அவர் அந்த சைட் எடுத்து செய்ய வில்லை என்றும் அதன் சைட் மேற்பார்வையாளர் தான் அதை நடத்துவதாகவும் முதல் குற்ற அறிக்கையில் சொல்ல சொல்லிவிட்டார் ..
ஆனால் இறந்த பின் அறிக்கையில் அவரின் உறவினர்கள் சரியாக கம்பெனி பெயரை சொல்லிவிட மாட்டிகொண்டது .. இது போதாது என்று அவர் அழைத்து வந்த வக்கீலுக்கும் இதை சொல்லாது பொன்னது மட்டுமல்லாது சரியாக பணமும் தரவில்லை.. அந்த கோபத்தில் இருந்த வக்கீல் இதை அறிந்தவுடன் அந்த சைட் மேற்பார்வையாளர் நண்பரை அடித்து காவல் நிலையத்தில் தகராறு செய்து,வேண்டும் என்ற அளவு பணம் பெற்றுக்கொண்டு ஒரு வழியாக இரண்டு தினத்திற்கு பின் உடலை பேத பரிசோதைனை செய்து அனுப்பிவைத்தனர் ..

அந்த சைட் மேற்பார்வையாளர் நண்பருக்கு கிடைத்தது எல்லாம் பிரச்சனை தூக்கமின்மை பசி பட்டினி அழைச்சல் சோர்வு மனஇறுக்கம் அடி 

#எவன் வாழ்வதற்கோ எவன் கம்பெனி பெயரோ கெடாமல் இருக்கவோ எங்கள என் டா படுத்துறிங்க 

( பின்குறிப்பு : எங்க கம்பெனி இல்லைங்கோ )