தமிழகம் முழுதும் வெவ்வேறு கல்லூரி மற்றும் தமிழ் உணர்வாளர்களால் தனி தமிழ் ஈழம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நிகழ்ந்து வருகிறது .. இப்போராட்டத்தின் ஆதரவாளர்களால் (நான் உட்பட ) இது அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைந்தது அல்லது சென்றடைவது போலவும் , எல்லா கட்சிகளும் நம்மைக்கண்டு அஞ்சுவாதாகவும் சொல்லப்படுகிற இந்தப்போராட்டம் உண்மையில் எதை செய்து முடித்துள்ளது , எதை செய்ய வேண்டியதுள்ளது என்பதே இந்த கட்டுரை ..
சில நாட்களாக வெவ்வேறு தரப்பட்ட நண்பர்கள் மாணவர்கள் இளைஞர்கள் கிராம பொதுமக்கள் நகர பொதுமக்கள் சில அரசியல் கட்சி சார்புடைய தோழமைகள் சமூக சிந்தனைக்கொண்டவர்கள் , சிந்தனை இல்லாதவர்கள் என பலதரப்பட்ட தமிழர்கள் உடனான கருத்து கேட்டலும் பரிமாற்றமும் மட்டுமே இது .. இதை நான் எழுதுவது போலவே , ஏற்பதும் நிராகரிப்பதும் உங்களின் சுகந்திரம் இந்த கட்டுரையின் மனிதர்கள் போலவே ..
போராட்டம் துவங்கிய நாள் இரவில் என்னுடன் படித்த சில தமிழ் உணர்வு சமூக சிந்தனைக்கொண்ட நண்பர்களுக்கு தொலைபேசியில் தொடர்புக்கொண்டு இதில் பங்கெடுக்கும் அவசியம் பற்றி விவாதிதோம் .. 2009 ஆம் ஆண்டில் தவற விட்ட போராட்டம் மீண்டும் உயிர்ப்பெற்றிருப்பது எங்களுக்கு ஒருவித மகிழ்ச்சியும் உத்வேகத்தையும் ஏற்ப்படுத்திருந்தது .. போராட்டம் செய்த மாணவர் ஒருவர்க்கு அழைத்து வாழ்த்தினோம் .. இருப்பினும் 2009யின் ஞாபகம் இருந்தது .. இம்முறை இதில் பங்கேற்க விரும்பு தோழர்கள் பலரை ஒன்றுதிரட்ட முயற்சித்தோம் .. வழக்கம் போல சொற்பமாகவே முன்வந்தனர் .. இப்போது நாங்கள் மாணவர்கள் அல்ல .. எல்லோரும் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பணியில் உள்ளோம் .. படித்து முடித்துவிட்டோம் .. மாணவர்களுடன் சேர்ந்து செய்ய முடியாது , தனியாக செய்வதா ?. நாங்கள் எங்கு ஒன்று கூடுவது .. எப்படி போராட்டத்தை முன் நிறுத்துவது .. சில போராட்டத்தில் பங்கெடுத்த இருவரிடம் இது பற்றி கேக்கலாம் என்று முடிவு செய்து அவர்களை தனிப்பட்ட முறையில் எங்களின் நிலைப்பாட்டை விவரித்து அணுகினோம் .. நாங்களும் போராட வேண்டும் என்று அவர்கள் விரும்ம்பினாலும் தனியே செய்ய முயற்சிப்பது உங்களை பிரச்சனையில் கொண்டு போய் விடும் அதே சமயம் நீங்கள் மாணவர்களுடன் பங்கேற்க முடியாவிட்டாலும் வேறு இயக்கங்களுடன் சேர்ந்து செய்யுமாறும் அல்லது மக்களுக்கு இதனை பற்றிய சிந்தனையை போராட்டத்தை கொண்டு செல்லுமாறும் சொன்னார்கள் ..
முதலில் என் கல்லூரியின் தற்போதைய மாணவர்கள் சிலருடன் இதை பற்றி விவாதித்தேன் . . அப்போது அவர்கள் பலவகைப்பட்ட பயத்துடன் இதுலாம் செய்ய முடியும் என்று நம்பிக்கையும் , நம் கல்லூரி அளவில் சாத்தியமானதும் என்று சொல்லமுடியாது வேண்டுமானால் நீங்கள் செய்யுங்கள் , யார் வருகிறார்களோ இல்லையோ நான் வருகிறேன் என்றனர் .. ஆனால் மறுப்பக்கம் போராட்டம் விரிவடைந்துக்கொண்டிருந்தது ..
மீண்டும் வேறு பல கல்லூரிகளில் படித்துக்கொண்டிருக்கும் சக நண்பர்களுடன் போராட்டம் பற்றி விவாதிக்க துவங்கினேன் .. இந்த போராட்டம் பற்றி என்ன நினைகிறீர்கள் என்றேன் .. பெரும்பாலும் அவர்கள் சொன்ன வார்த்தை "ஐ சப்போர்ட் (நான் ஆதரிக்கிறேன் ) ".. சரி அப்போது களம் காண்போமா வருவீர்களா என்றதும் பலரும் சொன்ன வார்த்தை " முடியாது ". ஒரு சிலர் மட்டுமே நான் அனைத்து மாணவர்களின் விருப்பமறிந்து பின் சொல்கிறேன் ..
இங்கே தயக்கம் இருப்பது தெரிந்த விஷயம் தான் .. 2009யில் நாங்கள் கேக்கும் போது கிடைத்த பதிலும் அது தான் .. நிருவாகத்தின் அச்சுறுத்தல் , குடும்ப நிலைமை , மாணவர்கள் பின்வாங்கிவிட்டால் ? ஒரு வேலை இவன்தான் அனைவரையும் ஒன்றினைத்தான் என்று சிலரால் போட்டு கொடுக்க பெற்று பிரச்சனைகளில் தனியாக மாட்டிகொண்டால் ? இன்னும் பல கேள்விகள் .. இதற்க்கெல்லாம் ஒரே பதில் இப்போது போராடும் மாணவர்கள் எப்படி முன்னெடுத்து செய்கிறார்கள் , எப்படி மற்ற தோழமைகளின் ஆதரவு பெற்றார்கள் என்பது தான் ..
இங்கே நான் பணிபுரியும் கிராமத்தில் உள்ள சில மனிதர்களின் கருத்துக்கள்
அப்பாசாமி 55 வயது : சார் நீங்க சொல்றது சரிதான் , ஆனா நாம ஏன் போராடனும் .. கஞ்சி யாரு ஊத்துவா ? பொழப்ப பாக்க விடுங்க .. நீங்களும் போய் அதை செய்யுங்க ..
செல்வி 47 வயது: என்ன பசங்க போராட்டம் எதுக்காக ? ஈழம் பற்றி எடுத்து சொன்ன பின் அப்படியா எனக்கு தெரியாது என்றார் . . இப்போது நான் இதுலாம் சொல்லிய பின் இது பற்றி உங்களின் கருத்து என்ன என்று கேட்ட போது என்ன சொல்லணும் , நான் என் வேலைய செய்றேன் ,அவங்க அதை செய்றாங்க அதுக்கு நான் என்ன சொல்றது .. இல்ல நீங்க ஆதரிகேங்களா, நான் என் வேலை செய்றேன் அவளோதான் போப் பா .. (நானும் அவர் உடனே ஆதரிப்பார் என்று எதிர்ப்பாக்க வில்லை .. புதிதாக கேக்கப்படும் ஒன்றில் தனக்கென்று தனி கருத்து ஒருவருக்கு உடனே வருமென்று எதிர்ப்பார்க்க முடியாது ..)
பலரும் ஒரு பெரிய ஆதரவாக பதில் தரவில்லை .. ஒரு வேலை அவர்கள் டெசோ ஆதரவாளர்கள் என்று படிப்பவர்கள் நினைக்க வேண்டாம் .. அவர்கள் பிரச்னையை அடுத்தவர்களுடையது என்று விலகி நின்றுப்பார்ப்பவர்கள் ..
சரி படித்த இளைஞர்கள் என்று சிலரிடம் இது பற்றி கேட்டேன் :
ஒருவர் பெரிய கல்லூரி ஒன்றில் முதுகலை பொறியியல் முதலாம் ஆண்டு , அவர் பதில் தான் என்னை இது பற்றி எழுத வேண்டும் என்று தோன்ற செய்தது .. அவர் சொன்னது , போராட்டமா எதுக்கு , நீங்க போராடுனா இலங்கை ல மாறிறுமா ? எனக்கு கூட போராட ஆசை தான், லீவ் கிடைக்கும் ஆனா பிரச்சனை வரும் கல்லூரி நிர்வாகம் ஏதாவது பண்ணிட்டா ?
இவர் தான் இப்படி என்று இன்னொரு தோழரிடம் கருத்து கேட்டேன் , அவர் உங்களுக்கு வேற வேலை ஏதும் இல்லனா இப்படி தான் பண்ணுவேங்க , போங்கடா என்று சில கெட்ட வார்த்தைகளுடன் வந்தது ..
அவரிடம் அப்போது போராடும் சக மாணவர்களை பற்றி நீங்கள் என்ன நினைக்கறீர்கள் என்று கேட்டதற்கு , எல்லாம் கொழுப்பு வேற என்ன என்றார் .. (இது ஒரு வேளை தன் கையாளாகாத தனத்தின் காரணமாக அவர்களின் மீது உண்டான கோபமாக இருக்கலாம் .)
இருந்தாலும் பெரும்பான்மையான மாணவர்கள் சொன்னது , விருப்பம் தான் ஆனா பயமா இருக்கு .. தீடிர்னு கூட பண்ண பசங்க பின் வாங்கிடாங்கனா , இல்ல நிர்வாகம் ஏதும் சூழ்ச்சி பண்ணி எங்கள பிறிச்சிட்டாங்கனா , நாலு அஞ்சு பேர் மட்டும் மாட்டி அவன் வாழ்க்கை போறதுக்கா ?..
இங்கே நாம் மூகநூலில் அனைவருக்கும் சென்று சேர்க்கப்பட்டதாக நினைக்கும் கருத்துக்கள் உண்மையில் ஒப்பிட்டு பார்க்கையில் மிக சொற்பமான மக்கள் மத்தியில் மட்டும் தான் போய் சேர்ந்துள்ளது ..
இப்படிபட்ட சூழலில் இந்த போராட்டத்தை பல தரப்பட்ட மாணவர்கள் எடுத்து இருந்தாலும் , இங்கே நாம் பார்க்க வேண்டியது இந்த போராடாத பெரும்பான்மையான மக்களை போராட்ட களம் நோக்கி செல்ல கருத்துக்கள் கொண்டு சேர்த்து , அவர்களின் ஆதரவாலும் போராட்டத்தாலும் தான் இந்த போராட்டத்தை வெற்றி பெற வைக்க முடியும் என்பது தான் ..
அதற்கு முதலில் விருப்பம் இருந்தும் பயம் கொண்டு கல்லூரியின் நிர்வாகதிற்கு கட்டுப்பட்டு இருக்கும் இந்த பெரும்பான்மையான மாணவர்களை போராட்டத்துக்குள் இணைக்காவிட்டால் நிச்சியம் இது ஒரு பெரிய அளவில் அரசின் நிர்வாகத்திற்கு அச்சுறுத்தலாக இருக்காது .. எந்த அரசாங்கமும் குறிப்பாக இந்திய அரசும் தமிழக அரசும் கண்டுக்கொள்ளாது .. நாம் எற்றுகொள்கிறோமோ இல்லையோ நிலைமை இது தான் .. போராட்டத்தை எப்படி ஒருங்கிணைப்பது விரிவுப்படுத்துவது என்று சிந்தித்து முடிவெடுத்து செயல் பட வேண்டிய தருணமிது ..